states

img

சிறுமி பாலியல் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜரானார் எடியூரப்பா

தென்னிந்தியாவில் பாஜகவின் முக்கிய தலை வரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான எடியூரப்பாவின் வீட்டிற்கு கடந்த பிப்ரவரி 2 அன்று கல்வி தொடர்பாக உதவி  கேட்க பெண் ஒருவர் தனது மகளு டன் சென்றுள்ளார். அடுத்த சில நாட்களில் மீண்டும் அதே பெண் எடியூரப்பாவிடம் உதவி கேட்க சென்ற பொழுது தனது 17 வயது மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடு பட்டதாக கூறி பெங்களூரு சதா சிவ நகர் காவல்நிலையத்தில் புகார்  அளித்தார். சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில்  எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களில் வழக்கு  தொடர்ந்த சிறுமியின் தாயார் உயிரிழந்த சம்பவம் கடும்  சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், வழக்கை விசா ரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) ஜூன் 12 அன்று  ஆஜராக எடியூரப்பாவிற்கு சம்மன் அனுப்பியது.

ஆனால் எடியூரப்பா ஆஜராகாமல் தில்லிக்கு ஓட்டம்  பிடித்தார். இதனால் அதிருப்தி அடைந்த வழக்கை விசா ரிக்கும் நீதிமன்றமான பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றம்  எடியூரப்பாவிற்கு பிடிவாரண்ட் பிறப்பித்த நிலையில், இதனை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தின் வாயி லாக கைது நடவடிக்கையில் இருந்து தப்பித்தார். எனி னும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என உயர்நீதி மன்றத்தின் உத்தரவின் பேரில் திங்களன்று சிஐடி குழு  முன்பு விசாரணைக்கு எடியூரப்பா நேரில் ஆஜரானார்.